சன் ரைசெஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த வருடம் மிக சிறப்பாக விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் தனது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு இவரது உந்துதலே காரணம் என கூறியுள்ளார்.
இந்த சீசனில் சன் ரைசெஸ் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 17 ஆட்டத்தில் 21 விக்கெடுகள் வீழ்த்தியுள்ளார். இது இவருக்கு முந்தைய சீசனை விட அதிகம் ஆகும்.
பஞ்சாப் அணிக்காக முதல் தரவரிசை கிரிக்கெட்டில் 2007ம் ஆடி வரும் இவர் இந்திய அணியில் ஆடுவதற்கு போராடி வருகிறார்.
அவரது கனவு நெடுதூரம் இல்லை எனும் விதமாக, இந்த ஐபில் அவருக்கு இந்திய அணியில் இணைய வழிவகுத்து கொடுத்துள்ளது. ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய அணியில் ஒருநாள் போட்டி தொடரில் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரிடம் கேட்ட பொழுது, ” இந்திய அணிக்காக ஆடுவதே எனது நெடுநாள் கணவாகும். அது இப்பொழுது நிறைவேறியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. முதலில் ஆண்டவனுக்கு நன்றி கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நானும் விராத் கோலியும் 2008ம் ஆண்டு நடந்த U19 உலககோப்பையில் ஒன்றாக விளையடியுள்ளோம், அவரது கேப்டன்ஷிப் எனக்கு மிகவும் பரிச்சயமானது. அவரின் இந்த 10 வருட வளர்ச்சி எனக்கு மிகவும் உத்வேகத்தை கொடுக்கும். 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவரது கேப்டன்ஷிப் ல் ஆடுவது பெருமிதம் அளிக்கிறது. இணகிய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலாக உள்ளேன்” இவ்வாறாக கூறினார்.
மேலும் அவர், காயங்களால் அவதிப்பட்ட காலங்கள் எனக்கு மிகவும் கற்றுக்கொடுத்தது, மனஉறுதி உடன் போராடவும் கற்றுக்கொண்டதாக கூறினார்.
கடந்த ஸ்ரீலங்கா தொடருக்கே இடம்பெறுவேன் என நம்பினேன் ஆனால் காயம் காரணமாக அது இயலவில்லை. எனினும் நடந்ததை எண்ணி வருத்தப்படுவதைவிட வருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற முயற்சிப்பதே சிறந்தது என தெரிவித்தார்.
இந்திய வீரர்களில் கணிசமாக 140kmph வேகத்தில் வீசக்கூடியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
இவரது சகோதரர் உதய் கவுலும் இவரும் U19 உலகக்கோப்பை மற்றும் பஞ்சாப் அணிக்காக முதல் தர போட்டிகள் ஆடியுள்ளார்கள்.