வீரர்களை திட்டியதால் தான் கும்ப்ளேவை நீக்கினார்களா ?

தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அணில் கும்ப்ளே விளக்கியுள்ளார் இந்த திடீர் விலகளுக்கு மற்றொரு காரணமும் கூறிகிறார்கள் அது என்னவென்றால், சாம்பியன் ட்ரோபியில் தோல்வி அடைந்ததால் இந்திய வீரர்களை அணில் கும்ப்ளே திட்டியுள்ளாராம் இதனால் தான் கும்ப்ளேவின் பதவி பறிக்க பட்டதாக கூறிகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளதை பிசிசிஐ உறுதி செய்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தபோதும், அதை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார்.

இந்திய அணிக்கான அடுத்த தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து பிசிசிஐ செயல்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய அணியின் கண்காணிப்பாளராக கிரிக்கெட் நடவடிக்கைகள் மேலாளர் எம்.வி.ஸ்ரீதர் நியமிக்கப்படுகிறார் என்று பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே இந்த முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாகவே இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டை நீக்கும் முயற்சியாக, கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான சச்சின், விவிஎஸ் லஷ்மண், கங்குலி ஆகியோர் கும்ப்ளே மற்றும் கோலியுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது, கும்ப்ளேவுடன் இனியும் இணைந்து பணிபுரியத் தயாராக இல்லை என்று கோலி திட்டவட்டமாக தெரிவித்ததாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இதன் விழைவாக அணில் கும்ப்ளே இந்திய வீரர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் வைத்து திட்டியுள்ளாராம், அணில் கும்ப்ளே விளக்களுக்கு இதுவும் ஒரு காரணமாம்.
இதனால் வெஸ்ட் இந்தியன்ஸ் உடன் விளையாடும் இந்திய அணி பையிற்ச்சியாளர்கள் யாரும் இல்லாமல் விளையாட உள்ளார்கள்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.