தோனி என்றாலே கீப்பிங்க் மற்றுன் ஃபினிசிங் ஆகிய இரண்டிற்கும் பெயர் போனவர். கேபிடன்சிப் என்பதை அதை விட அசாத்தியமாக செய்யக் கூடியவர்.
தற்போது இந்திய அணியின் கேப்டனாக இல்லாமல் விக்கெட் கீப்பட் பேட்ஸ்மேனாக மட்டும் ஆடி வருகிறார். இந்திய அணியை அவ்வப்போது ஃபின்சிங் செய்து வழி நடட்தி வெற்றி பெரும் பணியை கையில் எடுத்து சிறப்பாக செய்து வருகிறார்.
நேற்றய போட்டி மகராஸ்ட்ரா மாநிலத்தின் நாக்பூர் மைதானத்தில் நடந்தது. இந்த மைதான ஆடுகளம் சர்ச்சைகளுக்குப் பெயர் போனதாகும். கடந்த முறை இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது இந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியும் நடைபெற்றது.
அந்த டெஸ்ட் போட்டியில் மூன்றே நாட்களில் தென்னாபிரிக்கா தோல்வியைத் தலுவியது. பின்னர் பல முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மைதான ஆடுகளத்தின் தன்மையின் மீது விமர்சங்களை வைத்தனர்.
ஆடுகள்ம், புதர் மண் போல் இருந்தது சரியான சராசரியான ஆடுகளமாகக் கூட இல்லை என தென்னாப்பிரிக்க வீரர்களும் கூறினர். இதனால் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் இந்த ஆடுகளத்தின் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கொடுத்தது.
அதன் பின்னர் சர்வதேச போட்டிகள் இங்கு நடைபெறவில்லை. நேற்றைய இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இந்த மைதானத்தில் தொடரின் கடைசி ஒருநள் போட்டியில் விளையாடியது.
அதற்க்காக ஆடுகளம் புதிதாக வடிவமைக்கப்பட்டது. புதிய ஆடுகளங்கள் சற்று நாம் நினைத்தபடி நடந்து கொள்ளாது. முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது மிக மந்தமாகவே காணப்பட்டது.
மந்தமான ஆடுகளம் தான் என நினைத்து பேட்ஸ்மேன் முதல் கீப்பர் வரை அனைவரும் அதற்கேற்றார் போல ஆடிவந்தனர். ஆனால், திடீரென ஆடிகளம் ஒரு மாதிரியான நடத்தையக் காட்ட ஆரம்பித்தது. இது பேட்ஸ்மேனுக்கும் கீப்பருக்கும் சற்று வேலை செய்ய கடினமாகத்தான் இருந்தது.
அதிலும், அந்த ஆடுகளத்தில் ஸ்டம்பின் அருகில் நின்று கீப்பிங் செய்வது என்பது கடின்மான ஒரு வேலையாகும். அதிலும் குல்தீப் யாத்வ போன்ற கணிக்க முடியா இந்திய சைனா மேன் சுழற்ப்பந்து வீக்சாளர்களை கணித்து கீப்பிங் செய்வது மிகக் கடினமான காரியமாகும்.
அதில் தான் மகேந்திர சிங் தோனி தனத் அதி அற்புத திறமையைக் காட்டியிருக்கிறார். குல்தீப் யாதவ் வீசிய பந்து சற்று அளவிற்க்கு அதிகமாக குதித்தெழும்ப அந்த பந்தை ஸ்டம்பிற்க்கு அருகில் நின்று திடீரென மேலே போன பந்தை பட்னென பிடித்து விடுகிறார் தோனி.
அந்த வீடியோ இணைப்பு கீழே :