Cricket, Virat Kohli, Delhi, Gautam Gambhir, Ranji Trophy

கடந்த வாரம் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கூட்டம் போட்ட பிறகு ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியில் விராட் கோலி இருக்கிறார் என டெல்லி கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

கோலியை தவிர்த்து, ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் டெல்லி அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் மட்டும் களமிறங்கும் இஷாந்த் ஷர்மா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில்லை. இனி தொடர்ந்து இந்தியாவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாடுவுள்ளதால், ரஞ்சி கோப்பையில் இஷாந்த் ஷர்மா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் ரிஷப் பண்டும் விளையாடுவதால், அவர் விளையாடுவது சந்தேகம் தான். விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடவுள்ளதால், டெல்லி அணிக்காக விளையாடுவது கடினம் தான்.

இதுவரை டெல்லி அணிக்கு கேப்டன் யார் என்று அறிவிக்கவில்லை. முன்னதாக கேப்டன் யார் என்று அறிவிப்பதாக இருந்தது, ஆனால் மீண்டும் கம்பிர் கேப்டனாக செயல்படுவாரா என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. விஜய் ஹசாரே டிராபியில் கம்பிருக்கு பதிலாக பண்ட் தான் கேப்டனாக இருந்தார். அதே போல் இப்பொழுதும் நடந்தால், ஆச்சரிய படுவதற்கு இல்லை.

40 வீரர்களில், சில வீரர்கள் 19 வயதிற்கு உட்பட்டோர் இந்திய அணியில் விளையாடியுள்ளனர். பர்விந்தர் அவானா, மோஹித் ஷர்மா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *