தலைமை பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அணில் கும்ப்ளேவின் 1 வருட பதவி காலம் முடிந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
அணில் கும்ப்ளே பயிற்சியாளராக இருக்கும் பொழுது, 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 12 போட்டிகளில் வென்று 4 போட்டிகளில் தோல்வியும் 1 போட்டி டை ஆனது. அவரது பொறுப்பில் விளையாடிய இந்திய அணி பட்டையை கிளப்பினாலும், தன்னுடைய கடமையை பிசிசிஐ கடைபிடிக்கறது.
இதனால் விராட் கோலி ஆச்சரியம் படவில்லை. இது ஒன்றும் புதிதல்ல, இது பல வருடமாக நடந்து கொண்டு இருக்கிறது என விராட் கோலி கூறினார்.
“இந்த செயல் முறை எப்பொழுதும் நடப்பதுதான், இதுவரை நடந்திருக்கிறது என எனக்கு தெரியும். கடந்த முறையும் இதே தான் பின் பற்றினார்கள். இதனால், இது வித்தியாசம் இல்லை. தன்னுடைய கடமையை பிசிசிஐ செய்கிறது ,” விராட் கோலி கூறினார்.