அப்பவே சொன்ன சச்சின், கோலி தான் பெஸ்ட்
5 வருடத்திற்க்கு முன்னரே சச்சின் டெண்டுல்கர் இந்திய கேப்டன் விராட் கோலியை பற்றி ஒரு கூற்றை முன் வைத்தார். அதாவது, விராட் கோலி தான் என்னுடைய அதிக சத சாதனையை முறியடிப்பார் என அப்பவே கூறினார்.
விராட் கோலி அல்லது ரோகித் சர்மா இருவரில் ஒருவேரே எனது சாதனையை முறியடிப்பார் என் கூறியிருந்தார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நடந்த நேர்கானலில் அவர் கூறியதாவது.
அந்த சாதனையை யர் வேண்டுமானால் முறியடிக்கலாம், தற்போது இந்திய அணியில் இருக்கும் ரோகித் சர்மா அல்லது விராட் கோலி இருவரில் ஒருவர் முறியடிப்பர். எனது சதனையை ஒரு இந்திய வீரர் முறியடிப்பது எனக்கு மகிழ்ச்சி தான்.
எனக் கூறியிருந்தார்.
தற்போது அந்த சாதனை என்னவென்றால்,
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை விராத் கோலி நேற்றுடன் 30 சதங்களை விளாசியுள்ளார். இந்த 30 சதங்களை வெறும் 186 இன்னிங்க்சில் அடித்து தள்ளியுள்ளார்.
ஆனால் சச்சின் 30 சதங்கள் அடிக்க 266 இன்னிங்சுகள் ஆனது.
இதை வைத்து பார்க்கும் போது சச்சினின் 49 ஓரு நாள் சதங்களை அடிக்க விராட் கோலி பெரிதாக மெனக் கெட வேண்டியதில்லை எனத் தான் தெரிகிறது.
இதனால் தான் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியால் தான் என்னுடைய 49 சத சாதனையை முறியடிக்க முடியும் என அப்பவே கூறியுள்ளார்.