இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர்களை எண்ணினால் அதில் விராட் கோலியும் ஒருவராக வருவார் என்பது திண்ணமே. அதனை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் விராட். இந்திய அணியின் கேப்டன், பேட்டிங் தூண் என பல் வேறு வகையில் அணிக்கு தின்க் டேங்க் ஆக இருந்து வருகிறார் விராட்.
தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா இடையிளான டி20 தொடர் ரான்ச்சியில் நடந்து வருகிறது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்து மழை பெய்து வரும் நிலையில் தனது சமயோஜித புத்தியைக் காண்பித்தார் விராட்.
மேலும், முதல் மூன்று ஓவர்களில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை வீச வைத்து ஆஸ்திரேலிய அணியை நிலைகுழைய வைத்தார் விராட். மேலும், அவ்வப்போது பந்து வீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டர்களை மாற்றி ஆஸ்திரேலிய அணியை திக்கு முக்காட வைத்து தற்போது கிட்டத்தட்ட அந்த அணியை ஒடுக்கிவிடார் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது மழை காரணமாக 19ஆவது ஓவரில் ஆட்டம் நிருத்தப்பட்டுள்ளது. இதே ஓவரில் தான் விராட் கோலியிம் அற்புதம் படைத்தார். 19ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீர அந்த ஒவரின் முதல் பந்தில் ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டைன் லாங் ஆணில் தட்டி விட்டு இரண்டு ஓட நினைத்தார்.
ஆனால், அங்கு லாங் ஆனில் நிற்பது தளபதி விராட் கோலி. வேகமாக வந்தௌ பந்தை பிடித்து எடுத்து வெடுக்கென தோனியிடம் அடித்தார் விராட். தோனி கீப்பிங் ஸ்டம்பிற்கு பின்னால் நிற்க பந்தை நேராக ஸ்டபில் விட்டு எறிந்து கிரிஸ்டைனை ரன் அவுட் ஆக்கினார்.
ஆந்த வீடியோ கீழே :
https://twitter.com/84107010ghwj/status/916678230597304321