தோனி சிறந்த வீரராய் இருப்பதற்கு கங்குலி தான் காரணம் – விரேந்தர் சேவாக்

தோனி சிறந்த வீரராக இருப்பதற்கு ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி செய்த உதவியை பற்றி தெரிவித்தார் முன்னாள் இந்திய வீரர் விரேந்தர் சேவாக். தோனி ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக முன்னேற தன் இடத்தை கங்குலி பறிகொடுத்தார் என விரேந்தர் சேவாக் கூறினார். இது போல் முடிவுகளை கங்குலி எடுக்கவில்லை என்றால் தோனி சிறந்த வீரராக வந்திருக்க முடியாது என விரேந்தர் சேவாக் கூறினார்.

“அந்த நேரத்தில் பேட்டிங் வரிசையை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடினால் கங்குலி 3வது இடத்தில் களமிறங்குவார். அப்படி தொடக்க ஜோடி சொதப்பிவிட்டால் அதிரடி வீரர்கள் இர்பான் பதான் மற்றும் தோனியை இறக்க பிளான் போட்டோம்,” என சேவாக் கூறினார்.

“ஆனால் தோனியை 3வது இடத்தில் களமிறக்க முடிவு செய்தார் சவுரவ் கங்குலி. தன் இடத்தை எனக்கும் (சேவாக்), அடுத்து கிடைத்த இடத்தை தோனிக்கு கொடுத்தார் கங்குலி. அப்படி கங்குலி செய்யவில்லை என்றால், தோனி ஒரு சிறந்த வீரராக வளர்ந்திருக்க முடியாது,” என சேவாக் மேலும் கூறினார்.

“இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் கேப்டனாக இருக்கும் போது, தோனிக்கு பினிஷர் பொறுப்பை ஒப்படைத்தார். சில முறை மோசமான ஷாட்களை விளையாடி அவுட் ஆனார், அப்போது டிராவிட் தோனியை கண்டித்தார். அதன் பிறகு தோனி சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் யுவராஜுடன் சேர்ந்து அற்புதமாக பினிஷ் செய்தார்,” என சேவாக் தெரிவித்தார்.

தன் இடங்களை சவுரவ் கங்குலி இழந்தார், அதனால் தான் தோனி சிறப்பாக விளையாடினார். தன்னுடைய 42வது போட்டியின் போது ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வளம் வந்தார்.

அதன் பிறகு கேப்டன் பொறுப்பை பெற்ற மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுள்ளார். இந்திய அணிக்காக 2007 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளார் தோனி.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.