Cricket, Champions Trophy, India, Pakistan, Wahab Riaz, Ruled Out

பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸுக்கு இந்தியாவுடன் விளையாடும் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அந்த ஓவரை முடிக்காமல் மைதானத்தை விட்டு அவர் வெளியேறினார். அவருக்கு காயம் சரியாக சில நாட்கள் வேண்டும் என்றதால், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார்.

முதல் இன்னிங்சில் 46வது ஓவர் வீசிக்கொண்டிருந்த ரியாஸ், 4வது பந்து போட்டு முடித்ததும், காலை பிடித்து கொண்டு மைதானத்திலேயே உட்கார்ந்து விட்டார். 8.4 ஓவர்களில் 87 ரன் வாரி கொடுத்த ரியாஸ், மைதானத்தை விட்டு வெளியே சென்றார், இதனால் அவர் பேட்டிங் விளையாட கூட வரவில்லை.

திங்கட்கிழமை அன்று அவருக்கு ஸ்கேன் எடுத்த போது, வெளிப்பாட்டு காயத்திற்கு பிறகு உள் தசைநார்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்கள். இதனில் இருந்து குறைந்த பட்சம் 2 வாரம் தேவை படுகிறது, இதனால் இந்த தொடரில் இருந்து அவரை விலக்கப்பட்டது.

இந்நிலையில், மாற்று வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை இட்டது.

இதற்கு முன்னர், பக்க முறிவு காரணமாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் இந்த தொடரில் இருந்து விலகினார், அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் பின்ன் அணியில் இடம் பிடித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *