இந்திய அணி விக்க்டெ எடுக்க மிகவும் சிறமப்பட்டு வரும் நிலையில் தற்போது டேவிட் வார்னரை தனது ஆக்ரோசமான பந்து வீச்சால் க்லீன் போல்டு ஆக்கியுள்ளார் ஆல் ரவுன்டடர் ஹர்திக் பாண்டியா.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த இந்தூர் ஆடுகள்ம பேட்டிங் செய்ய சொர்க்கம் என முன்னரே ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்கான துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் துவக்க முதலே ஆடுகளத்தை பயன்படுத்தி நன்றாக பேட்டிங்க் ஆடத்துவங்கினர்.
ஒரு கட்டத்தில் மிகவும் அச்சுருத்தலாக இருந்தது இருவரின் ஆட்டமும். முதல் தர இந்திய பந்து வீச்சாளர்களால் கூட அந்த பார்ட்னர்சிப்பை பிரிக்க முடியாமல் திணறினர்.
எப்படியாவது ஒரு விக்க்டெ எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் 14ஆவது ஓவரை வீச வந்தார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரின் மூன்றாவது பந்தை பிடித்த வார்னருக்கு சரியாக நருக்கென்று ஒரு ஆஃப் கட்டர் வைத்து அவரது ஸ்டம்பை பதம் பார்த்து வெளியே அனுப்பினார்.
https://twitter.com/Cricvids1/status/911882867445080064
அந்த விக்கெட் எடுத்ததும் தன்னால் இன்னும் இது போன்ற விக்கெட்டுகளை எடுக்க முடியும் என அலட்டிக்காமல் இருந்தார் ஹர்திக் பாண்டியா.
தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 35 ஒவர்களுக்கு 200 ரன் எடுத்து 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபின்வ்ஹ் சதம் விளாசி களத்தில் இன்னும் இருக்கிறார்.
இந்தியா: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே, கேதர்ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், நாதன் கவுல்டர் நிலே, ஆஷ்டன் அகர் , பேட் கம்மின்ஸ், கனே ரிச்சர்ட்சன்.