கதை என்ன?
அடுத்த இரண்டு வருடத்துக்கு இந்தியா – A மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளர் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்தது. இது மட்டும் இல்லாமல், அவருக்கு 100 சதவீதம் சம்பளத்தையும் அதிக படுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.
ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
இந்திய ஏ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ராகுல் டிராவிட் இந்தியா ஏ அணி பயிற்சியாளராக உள்ளார். அதேபோல 19 வயதுக்கு உட்பட்டோர் அணி பயிற்சியாளராகவும் உள்ளார். அதே நேரம் ஐபிஎல் தொடரின்போது டெல்லி அணி பயிற்சியாளராகவும் உள்ளார். இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்திய ஏ மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைவதால் மீண்டும் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்தது என்ன?
இந்த சம்பளத்தை பற்றி பேச முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டு வாரத்திற்கு மேல் பேசினார்கள். கடைசியில் ராகுல் ட்ராவிடுக்கு 5 கோடி கொடுப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தியா – A மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்க உள்ளதால், இனி வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் அவரால் எந்த அணிக்கும் பயிற்சியாளராக இருக்க முடியாது.
தன் முதல் வேலையாக இந்தியா – A அணியுடன் தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள .இதனால் அந்த நேரத்தில் அவர் 19 வயதிற்குட்பட்டோர் அணியுடன் இருக்க முடியாது.