சாம்பியன்ஸ் டிராபி 2017: பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள் – விராட் கோலி

தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா. முதலில் டாஸ் வென்ற கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார், இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச தென்னாபிரிக்கா அணி 44.3 ஓவரில் 191 ரன்னில் சுருண்டது.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 72 பந்து மீதம் இருக்க 8-விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதனால், ஜூன் 15ஆம் தேதி எட்பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் அரையிறுதி போட்டியில் வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா.

போட்டி முடிந்த பிறகு,”எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார், நாங்கள் டாஸ் வென்றது தான் காரணம்,” என்று விராட் கோலி கூறினார்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 101-பந்துகளில் 76-ரன் அடித்தார்.

மறுபக்கம் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 25 பந்துகளில் 23 ரன் அடித்தார் யுவராஜ் சிங்.

இந்த போட்டியில் 83-பந்துகளில் 78-ரன் அடித்து இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அரைசதம் அடித்த ஷிகர் தவானை பாராட்டினார் கேப்டன் விராட் கோலி.

அதேசமயத்தில் இந்த போட்டியை யுவராஜ் தான் முடிக்கவேண்டும் என்று அவர் (யுவராஜ்) ஆசைப்பட்டிருந்தார்.

“தவான் சிறப்பாக விளையாடினார், என்னுடன் சேர்ந்து போட்டியை முடிக்கவேண்டும் என்று யுவராஜ் சிங் ஆசை பட்டார்,” என கோலி மேலும் கூறினார்.

டி வில்லியர்ஸின் விக்கெட் விரைவிலே கிடைத்ததில் நல்லது என கோலி உணர்கிறார்.

“நடுத்தர ஓவர்களில் உங்களை வருத்தப்பட வைப்பார் டி வில்லியர்ஸ். அவரது விக்கெட் விரைவிலே கிடைத்ததில் சந்தோசமாக இருக்கிறது,” என விராட் தெரிவித்தார்.

சேசிங் செய்யும் போது ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நீடிக்க வேண்டும் என்றும் கோலி கூறியிருந்தார்.

“யாராவது ஒருவர் கடைசி வரை விளையாடுவது முக்கியம்,” என கூறினார்.

மோர்னே மோர்கெல் வீசிய பந்தில் டி காக்கிடம் ரோகித் சர்மா அவுட் ஆக, இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த போது, டு பிளெஸ்ஸிஸ் அவரை வெளியே அனுப்பினார்.

புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் எடுக்க, அஸ்வின், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுக்க, இந்திய பீல்டர்கள் 3 ரன்-அவுட் செய்தனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.