திசாரா பெரேரா பந்தில் கடைசியாக கேதார் ஜாதவ் பவுண்டரி அடித்து இலங்கைக்கு எதிராக 321 ரன் அடிக்கும் வரை இந்திய அணிக்கு எல்லாமே சாதகமாக இருந்தது. இதற்கு முன்னதாக, பயிற்சி போட்டியில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுடன் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல், அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியிலும் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
ஆனால், இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 322 ரன் என்ற கடினமான இலக்கை கொடுத்தாலும், உலகத்தில் சிறந்த பந்துவீச்சு வச்சிருந்தும் இலங்கை அணியிடம் தோல்வி பெற்றது. இதனால், 8 பந்து மீதம் இருக்க 3 விக்கெட் மட்டுமே இழக்க 322 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை.
பேட்டிங் சிறப்பாக இருக்கிறது, ஆனால் பெரிய இலக்கை அடிக்க விடாமல் தடுக்க இந்திய அணிக்கு நல்ல பந்துவீச்சு தேவை. 5 நாளுக்கு முன்பு அதே மைதானத்தில் தான் இலங்கையை 299 ரன் கூட அடிக்க விடாமல் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 27 ரன் கொடுத்து 4 விக்கெட் இம்ரான் தாஹிர் எடுக்க, 203 ரன்னுக்கு சுருண்டது இலங்கை.
இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்காதது இந்திய ரசிகர்களுக்கு சந்தேகமாகவே உள்ளது.
2013 சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு காரணமாய் இருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் 8 விக்கெட் எடுத்தார். ஆனால், இந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டி கூட விளையாடாமல், பெஞ்ச் தேய்த்து கொண்டிருக்கிறார்.
இந்த இங்கிலாந்து நிலைமையில் 3 முக்கிய வேகப்பந்து வீச்சாளருடன் ஹர்டிக் பாண்டியா இறங்குகிறார், ஆனால் இது தேவையா?
விக்கெட் எடுக்கும் சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணி அழகாக உபயோக படுத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு தென்னாபிரிக்கா வீரர்கள் திணறினார்கள். இதனால், தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் களமிறங்குவார் என எதிர்பார்க்க படுகிறது.
அஸ்வினுக்கு யார் வழி விடுவார்கள்:
அஸ்வினுக்கு வேகப்பந்து வீச்சாளர் அல்லது ஜாதவ் அல்லது ஹர்டிக் பாண்டியா தான் வழி விட வேண்டும். ஆனால், இங்கிலாந்து வேகப்பந்துக்கு சாதமாக இருப்பதால், புவனேஸ்வர், பும்ரா, உமேஷ் ஆகியோர் இருப்பார்கள். இதனால், பாண்டியா அல்லது ஜாதவ் தான் அஸ்வினுக்கு வழி விட முடியும்.