காயத்தால் அவதிப்படும் தவான் பயிற்சிக்கு வரவில்லை

பாகிஸ்தானின் ஸ்விங் பந்து வீச்சை சமாளிக்க, இந்திய வீரர்கள் புது நுட்பங்களை கண்டு பிடித்துள்ளது. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் உள்ள பந்துகளில் பயிற்சி கொண்டு எடுத்து வருகின்றன. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பந்துகள் வெள்ளை நிற பந்துடன் அதிகமாக ஸ்விங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை காரணமாக இந்திய வீரர் உள்புறமே பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பந்துகளில் பயிற்சி எடுக்கலாம் என யோசனை கூறினார்.

அடுத்த சில நிமிடங்களில், தோனி, ரோகித் சர்மா ஆகியோர் பல நிறபந்துகளில் பயிற்சி எடுக்க முடிவு செய்தனர். ஆனால், விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் வெள்ளை பந்துகளில் பயிற்சி எடுக்க தொடங்கினர்.

இது போல் புது நுட்பங்களை உபயோகிப்பது முதல் முறை இல்லை. ஆஸ்திரேலியாவில் 2015-இல் நடந்த உலக கோப்பையின் போது, பாகிஸ்தானின் முகமது இர்பானை சமாளிக்க, ஒரு மேசையில் இருந்து பந்து வீச, அந்த பந்தை அடிக்க பயிற்சி எடுத்தனர். இதனால், உயரமாக இருக்கும் பந்துவீச்சாளர்களை சமாளிக்க எளிதாக இருக்கும்.

இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்னும் முனைப்புடன் இருக்கும்.

ஆனால், பயிற்சியின் போது ஷிகர் தவான் காணவில்லை. வியாழக்கிழமை மேற் கொண்ட பயிற்சியின் போது, அவரது விலா எலும்புக்கு அடி பட்டதால், நேற்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. 7 மாதம் கழித்து, அவரது பல நாள் ஜோடி ரோகித் ஷர்மாவுடன் இந்தியாவுக்காக தொடக்க வீரராக களமிறங்க போகிறார்.

இந்தியாவில் மட்டும் இல்ல, பாகிஸ்தானின் வாஹப் ரியாஸும் விளையாடுவது சந்தேகம் தான். இரண்டு அணிகளும் ஜூன் 4ஆம் தேதி அன்று மோதுகின்றன.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.