தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் 11வது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளும் மோதின.
இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் விக்கெட் விழுந்தது சாதாரண விஷயம் தான், ஆனால் விக்கெட்-கீப்பராக மகேந்திர சிங் தோனி இருக்கும்போது அவர் ஏன் இரண்டாவது ரன் ஓடினார் என்று தெரியவில்லை.
அந்த விக்கெட் எடுக்க விராட் கோலி பிளான் செய்தார், ஆனால் இதை எந்த கேமராவிலும் எடுக்காத பொழுது, மைதானத்தில் இருந்து போட்டியை நேரில் கண்ட ரசிகர் ஒருவர் இதை வீடியோ எடுத்தார். அவருடைய சிறப்பான நடிப்பால், கிரீஸில் இருந்த வீரர்கள் இரண்டாவது ரன்னுக்கு முயற்சித்த போது, ரன் அவுட் ஆனார்.
மிட்-விக்கெட் திசையில் அடித்த பந்தை முதல் முறையே சுலபமாக பிடிக்காமல், பந்தை தவர் விட்டதை போல் நடித்தார் விராட் கோலி. இதனால், இரண்டாவது ரன் ஓட முடிவு செய்தனர், இரண்டாவது ரன் ஓட தொடங்கும்போது, அந்த பந்தை தோனியிடம் அடித்தார் விராட் கோலி. பந்து கைக்கு வந்ததும் மீதி வேலையை செய்தார் தோனி.
ஒரே ரன்னில் முடித்திருக்கலாம் ஆனால், தென்னாபிரிக்கா வீரர்களை பற்றி புரிந்த கோலி, அற்புதமாக நடித்து இம்ரான் தாஹிர் விக்கெட்டை எடுத்தனர்.
தென்னாபிரிக்கா வீரர்கள் மூன்று பேர் ரன்-அவுட் ஆக 191-ரன்னுக்கு சுருண்டது அந்த அணி.
இந்த வெற்றியால், தென்னாபிரிக்கா அணி இந்த தொடரை விட்டு வெளியேற, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா. ஜூன் 15ஆம் தேதி வங்கதேசத்துடன் அரையிறுதி போட்டி விளையாடுகிறது இந்தியா.