Mohammad Amir, Rohit Sharma, India Pakistan, Champions Trophy

இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே சண்டைகள், வேடிக்கைகள் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகின்றது. இங்கயும் அதே கதை தான். முதல் ஓவரிலேயே சண்டைகள் ஆரம்பித்தது.

அரசியல் பதற்றத்தால் இரு அணிகளும் இருதரப்பு தொடர்கள் விளையாடுவதில்லை. கடைசியாக 2007-இல் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் விளையாட இந்தியாவிற்கு பாகிஸ்தான் வந்தது. இதனால், ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போதும் இதே கதை தான், அனைவரும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்த இரண்டு அணிகளும் விளையாடுவதை பார்ப்பதற்கு, ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர்.

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் டாஸ் வென்றதுக்கு பிறகு பந்துவீச்சை எடுத்தார். முதல் ஓவரை வீச வந்த முகமது அமிர் முதல் பந்தை அற்புதமாக வீசினார், இரண்டாவது பந்தும் கூட. இரண்டாவது பந்தை ரோகித் பேட்டில் படவில்லை, இதனால் பந்து விக்கெட்-கீப்பருக்கு சென்றது. ஆனால், ரோகித் ஏதோ சொல்வதற்கு முன் நடுவரிடம் அப்பீல் செய்தார் அமிர்.

இங்கே பாருங்கள்:

https://twitter.com/lKR1088/status/871303530333720576

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *