Cricket, Champions Trophy, India, Pakistan

விராட் கோலி மற்றும் மற்ற வீரர்களை பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்வதை நிறுத்தவேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ONGC என்னும் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைபார்த்து கொண்டிருக்கிறார். இதை தான் நிறுத்தவேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டு கொண்டுள்ளது. இவரை தவிர, அஜிங்க்யா ரஹானே, செதேஸ்வர் புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் சில பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.

அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள கிரிக்கெட் வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் அந்த நிறுவனத்திற்காக கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவார்கள். அந்த நிறுவனங்கள் அதிகமாக டெல்லியில் நடக்கும் போட்டிகளில் தான் விளையாடும். அந்த நிறுவனத்திற்காக விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பல போட்டிகளில் விளையாடியுள்ளார்கள்.

பல டெல்லி கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அந்த நிறுவனத்திற்காக விளையாடியுள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் மற்றும் கவுதம் கம்பிர் ஆகியோர் அந்த நிறுவனத்திற்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். தன் ஓய்வு கடிதத்தில் அந்த நிறுவனத்திற்கு நன்றி கூறினார் விரேந்தர் சேவாக்.

2011 உலக கோப்பையை இந்திய அணி வென்ற போது, விராட் கோலி, கவுதம் கம்பிர் மற்றும் முனாப் பட்டேல் ஆகியோருக்கு 20 லட்சம் பரிசு தருவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

விராட் கோலி மற்றும் அவர் தலைமையிலான இந்திய அணி தற்போது இலங்கையில் விளையாடிவருகிறது. அந்த தொடர் முடிந்து இந்தியா திரும்பியதும், இதை பற்றி அவர்கள் முடிவெடுப்பார்கள்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *