சாம்பியன்ஸ் டிராபி 2017: வீடியோ – ஒற்றை கையில் கேட்ச் பிடித்த ஏபி டி வில்லியர்ஸ்

தற்போது இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டு வருகிறது. அதன் 3வது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியின் போது, தென்னாபிரிக்கா கேப்டன் டி வில்லியர் 4 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ஆனால், அந்த போட்டி தென்னாபிரிக்காவின் கைக்கு வர டி வில்லியர்ஸ் தான் காரணமாக இருந்தார்.

300 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, தொடக்கத்தில் அடித்து நொறுக்கியது. 69 ரன் இருக்கும்போது தொடக்க ஜோடியை பிரித்தார் மோர்னே மோர்கெல். அதன் பிறகு வந்த குசால் மெண்டிஸ், உபுல் தரங்காவுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ரன் சேர்த்து கொண்டிருந்தார். அந்த ஜோடி 25 ரன் அடித்த பின், அந்த ஜோடி பிரிந்தது.

அந்த ஜோடி சிறப்பாக ஆடி, வெற்றிக்காக போராடியது, ஆனால் டி வில்லியர்ஸின் ஒற்றை கை கேட்ச் அந்த ஜோடியை பிரித்தது.

கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தை அடித்த குசால் மெண்டிஸ், மிட்-ஆனில் சென்றது. அந்த பந்து பவுண்டரி கோட்டுக்கு செல்லும் என நினைத்த போது, சூப்பர்மேன் போல் தாவி வலது கையில் அந்த பந்தை பிடித்து மெண்டிஸை பெவிலியனுக்கு அனுப்பினார் தென்னாபிரிக்கா கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ்.

அந்த விடியோவை இங்கே பாருங்கள்:

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.