தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி நடக்கிறது. இதில், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதல் 8 அணிகள் விளையாடுகிறது.
இதில் ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபியில் அஜிங்க்யா ரஹானேவுக்கு பதிலாக யுவராஜ் சிங் விளையாட வேண்டும் என முன்னால் ஆஸ்திரேலியா கேப்டன் மைகேல் கிளார்க் கூறியுள்ளார்.
சிறிது நாளுக்கு முன்பு முன்னால் இந்திய கேப்டன் முகமது அசாருதீன், முன்பு போல் யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி விளையாடுவதில்லை என கூறினார். இந்த கருத்துக்கு கிளார்க் பதிலளித்தார்.
“அனுபவம் வாய்ந்த யுவராஜ் மற்றும் தோனியுடன் தான் நான் இருப்பேன். அவர்கள் யார் என்று நிரூபிக்க இது தான் சரியான நேரம். ஒரு அணியில் இளம் மற்றும் அனுபவம் உள்ள வீரர்கள் இருக்க வேண்டும். நீங்கள் யுவராஜா ரஹானேவா என்று கேட்டால், நான் அனுபவம் உள்ள யுவராஜ் சிங் தான் என்று சொல்லுவேன்,” என கிளார்க் கூறினார்.
“சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்காக தோனி நன்றாக விளையாடுவார்,” என முன்னால் இலங்கை கேப்டன் குமார் சங்ககரா கூறியுள்ளார்.
இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் அரையிறுதி போட்டிக்கு செல்லும் என கிளார்க் கூறினார்.