அடுத்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரும்பி வருகிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பிசிசிஐ வரவேற்கப்போகிறது. ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் மற்றும் குஜராத் லையன்ஸுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கும் என பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி உறுதிப்படித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிக்சிங் செய்ததாக தகவல் வந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2016 மற்றும் 2017 ஐபில் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும். இதனால், ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வரவேற்க ஆவலுடன் உள்ளனர்.
“சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தானுக்கு ராயல்சுக்கு விதிக்கப்பட்ட தடை இந்த வருடத்துடன் முடிகிறது. இதனால் அடுத்த வருடம் இரண்டு அணிகளும் பங்கேற்க உள்ளது. ஆனால், அதிக அணிகள் ஐபில்-இல் விளையாடுவதற்கு பிசிசிஐ-க்கு ஆர்வம் இல்லை.”
“அடுத்த இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடும். அந்த அணிகள் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு பதிலாக களமிறங்கும்,” என ராகுல் ஜோரி கூறினார்.