அடுத்த மாதம் இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என்னும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் நடக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இதை நாம் பெரிய போட்டியாக கருதுகிறோம், ஆனால் இது ஒரு சாதாரண போட்டி தான் என கூறுகிறார் விராட் கோலி.
சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் 8 அணி பங்கேற்கின்றன – இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம். தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இந்த போட்டியை ‘பெரிய போட்டி’ என விராட் கோலி ஒப்புக்கொண்டார்.
“ஒரு கிரிக்கெட் வீரராக, நாங்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், உள்ளே நுழைந்து விட்டால் எந்த வித்தியாசமும் இல்லை.” என கோலி கூறினார்.
மேலும் “இந்தியா-பாகிஸ்தான் போட்டி நமக்கு ஊக்கத்தை அதிகரிக்கும், ஆனால் இது ஒரு சாதாரண போட்டி தான்,” என கூறினார்.
8 அணிகள் பங்கேற்பதால், இந்த தொடர் சுவாரசியமாக இருக்கும். ஆனால், இந்திய அணியின் கை தான் ஓங்கியிருந்தது என சொல்லினார்.
“இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளது, இதனால் இந்த தொடர் சுவாரசியமாக போகும். ஆனால் இந்தியாவின் கை தான் ஓங்கியிருக்கிறது,” என கோலி கூறினார்.
“கடந்த முறையும் அனுபவிக்க தான் சென்றோம், கோப்பையை வென்றோம். டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டோம். அதே போல் ஒருநாள் போட்டிகளிலும் செயல் பட ஆசையாக உள்ளது,” என மேலும் கூறினார்.
“கடந்த தொடரில் சிறந்த ஜோடியான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானை கண்டுபிடித்தோம். கடந்த முறை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டார்கள்,” என கூறினார்.
“நீங்கள் நிலைமைக்கு தகுந்தார் போல் விளையாடவேண்டும். இந்த தொடரில் எம்.ஸ். தோனி மற்றும் யுவராஜ் சிங் சிறப்பாக செயல் படுவார்கள் என நம்புகிறேன்,” என கூறினார்.
நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்ரிக்கா ஆகிய நாட்டின் வீரர்கள் இந்தியாவில் 10 வருடமாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுகின்றனர்.
இதனால் அவர்கள் எப்படி என்று புரிந்து கொள்ள முடிகிறதா என்ற கேட்ட போது,”சத்தியமாக இல்லை, டி20 க்கும் ஒருநாள் போட்டிக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த ஐபில் தொடர் எங்க அணி வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,” என கூறினார்.
இந்திய அணி தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் B பிரிவில் உள்ளது.