இந்தியா - இலங்கை 2வது டி20 போட்டி : டாஸ் , அணிகள் விவரம் 1

 

இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செத்துள்ளது.

இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், பும்ரா, யசுவேந்திரா சஹால்.

இலங்கை: திசாரா பெரைரா (கேப்டன்), டிக்வெலா, உபுல்தரங்கா, குஷால் பெரைரா, மேத்யூஸ், சமரவிக்ரமா, குணரத்னே, தாசுன், ‌ஷனகா, அகிலா தனஞ்செயா, சமீரா, நுவன்பிரதிப்.

இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி தனது அதிரடியை நீடித்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் டோனி, ராகுல், மனிஷ் பாண்டே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் வேகப்பந்தில் சிறப்பான நிலையில் உள்ளார்.

சுழற்பந்து வீரர்களான யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ் அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு இருவரும் தொடர்ந்து சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது. ஒருவேளை மாற்றம் இருந்தால் ஜெயதேவ் உனகட்டுக்கு பதிலாக பசவி தம்பி தேர்வு செய்யப்படலாம்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததால் 20 ஓவர் தொடரை இழக்காமல் இருக்க இலங்கை வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இலங்கை அணி தனது பேட்டிங்கை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். இந்தியாவின் சுழற்பந்தை சமாளிக்க கடுமையாக போராடுவார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *