இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், கொரோனா விதிமுறைகள் காரணமாக, மொத்த போட்டிகளும் மும்பை ஆடுகளங்களில் வைத்து நடத்தப்பட்டன.
15வது தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால் மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட நெடுந்தொடராக நடத்தப்பட்டது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் மற்ற அனைத்து அணிகளையும் விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்று, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்று விட்டதால் அதில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள், சாதனைகள் குறித்து இங்கு காண்போம்.
அப்படி இந்த தொடரில் அதிக சிக்சர் அடித்த 5 வீரர்கள்.
சஞ்சு சாம்சன்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்று அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த தொடரில் 17 போட்டிகளில் பங்கேற்ற இவர் 458 ரன்கள் அடித்துள்ளார். அதில் 2 அரை சதங்கள் அடங்கும், மேலும் இந்த தொடரில் இவர் 26 சிக்சர்கள் அடித்து அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.