கோலி அண்ட் கோ அசத்திவிட்டனர் : மனதாரா பாராட்டும் கேன் வில்லியம்சன்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் நேற்று தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நடைபெற்றது.

Tom Latham of New Zealand and Ross Taylor of New Zealand takes a run during the 3rd One Day International match between India and New Zealand held at the Green Park stadium in Kanpur. 29th October 2017 Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS

இந்திய அணி கடந்த சில தொடர்களாக விளையாடும் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தை தன் பக்கமே கடைசி வரை இழுத்து வெற்றி பெற்று வந்தது. ஆனால், இந்த தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று ஒரு திரில் போட்டியாக அமைந்தது.

338 என்ற சற்று கடினாமான இலக்கை அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணிக்கு தான் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். கான்பூர் மைதானத்தில் எப்படியும் இரவு சற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து முதலில் பந்து வீச தீர்மானித்து ஆட்டத்தை கடைசி ஓவர் வரை த்ரில்லாக கொண்டு சென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பாராட்டுக்குறியவர்.

எதிர்பார்த்தபடியே, இரவு 7 மணிக்கெல்லாம் பந்தில் அதிக ஈரப்பதம் குடிகொண்டுவிட்டது. இதனால் இந்திய இந்திய பந்து வீச்சாளர்களால் வழக்கமாக செயல்பட இயலவில்லை. குறிப்பாக இந்திய அணியின் முன்னனி பந்து வீச்சாலர் புவனேஷ்வர் குமார் இதானால் நிறைய ரன்னிற்கு துவக்கத்தில் அடித்து துவைக்கப்பட்டார்.

கடைசி வரை விக்கெட்டுகள் அதிகம் விடாமல் 46ஆவது ஓவர் வரை தன் பக்கம் வைத்திருந்த நியூசிலாந்து அணிக்கு இறுதி 5 ஓவர்களில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் இந்திய டெத் பௌலிங் இணை புவி-பும்ரா.

Virat and Williamson have taken to the modern-batting to a new high. Photo Credit: Getty Images.

அனுபவம் இல்லா, நியூசிலாந்தின் கடைசி வீரர்களால் அந்த அழுத்தத்தை தாங்க இயலாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்து வெற்றிக்கான் முயற்சியைக் கடைசி ஓவரில் பும்ராவிடம் கைவிட்டனர். பின்னர், ரோகித்தின் ஆட்டநாயகன் விருதுடன் இந்திய அணி 2-1 என தொடரைக் கைப்பற்றியது.

போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம் சன் இந்திய அணியை பாராட்டினார், அவர் கூறியதாவது,

இறுதியின் இது ஒரு அற்புதமான தொடராக அமைந்தது. நல்ல ஒரு கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. விராட் கோலி மற்றும் அவரது சகாக்களுக்கு வாழ்த்துக்கள். இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடியது. 

எங்களுக்கு ஒரு நல்ல தொடராக அமைந்ததுடன் நிறை கற்றுக்கொண்டோம். பல வீரர்கள் தங்களது திறமையக் காட்டியுள்ளனர். ஆடுகளம் ஆட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது. எங்கள் அணியில் மிடில் ஆடர் சற்று சோபித்துள்ளது.

டாம் லேதம் அற்புதமாக தெளிவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவருடைய ஆட்டத்தைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது. ராஸ் டெய்லர் அனுபவம் வாய்ந்த வீரர் அவரும் நன்றாக் ஆடினார். பந்து வீச்சாளர்களும் கிட்டத்தட்ட அனைத்து போடிகளிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

எப்படிப்பார்த்தாலும் இறுதியில் இந்திய வீரர்கள் எங்களது அனைத்து யுக்திகளையும் வென்றுவிட்டனர். இந்திய அணியின் பேலலன்ஸ் மிகச்சிறப்பாக உள்ளது. இந்திய அணி வீரர்கள் அற்புதம் படைத்துவிட்டார்கள்.

என இந்தியா வீரர்களை பாராட்டினார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.

போட்டியின் இறுதியில், பெற்ற பரிசுகள் விவரம் : 
  • ஆட்ட நாயகன் விருது – ரோகித் சர்மா 147(138) 18*4, 2*6
  • தொடர்நாயகன் விருது – விராட் கோலி 263 ரன், 2 சதம் , 87.67 சராசரி

தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்

  1. ஜஸ்பிரிட் பும்ரா – 6 விக்கெட், 23.50 சராசரி
  2. டிம் சௌத்தி – 6 விக்கெட், 33.17 சராசரி
  3. புவனேஷ்வர் குமார் – 5 விக்கெட், 38.60 சராசரி

Editor:

This website uses cookies.