இந்த உலகில் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், விக்கெட்-கீப்பர் யார் என பிபிசி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் விராட் கோலி, மிட்சல் ஸ்டார்க் மற்றும் எம்.ஸ். தோனி ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் விக்கெட்-கீப்பர் என வெற்றி பெற்றனர்.
தற்போது முதல் 8 அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்காக இங்கிலாந்தில் உள்ளார்கள், இந்த உலகில் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் விக்கெட்-கீப்பர் கணக்கெடுப்பில் சர்வதேச கேப்டன்களால் தேர்வு செய்ய வேண்டும் என ஊடங்கங்கள் கேட்டது.
விதிமுறை படி, ஒரு அணியின் கேப்டன் அந்த அணியில் பங்கேற்கும் வீரரை தேர்வு செய்யக்கூடாது. அவர்களின் முதல் தேர்வுக்கு 3 புள்ளிகளும், இரண்டாம் தேர்வுக்கு 2 புள்ளிகளும், மூன்றாவது தேர்வுக்கு 1 புள்ளியும் கிடைக்கும். இந்தியா, இலங்கை அணிகள் தவிர மற்ற 6 அணிகள் கலந்து கொண்டது.
இந்த கணக்கெடுப்பு முடிந்த நிலையில், விராட் கோலி தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 3 கேப்டன்கள் கோலியை சிறந்த பேட்ஸ்மேனாகவும், மீதி 3 கேப்டன்கள் கோலி இரண்டாவது சிறந்த பேட்ஸ்மேனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கோலிக்கு அடுத்த படியாக டி வில்லியர்ஸ் தான் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார்.
சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியாவின் வேக பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்றார்.
சிறந்த விக்கெட்-கீப்பருக்கான கணக்கெடுப்பில் குவின்டன் டி காக்கை வீழ்த்தி தோனி வெற்றி பெற்றார். இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் சஹாவும் இடம் பெற்றிருந்தார்.