அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவை மஞ்சள் நிற ஆடையில் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒரு அணி இரண்டு வருடம் தடை செய்த அணி எப்படி வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பியுள்ளது.
அடுத்த இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பாக ஐபில் கவுன்சில் மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் அனைத்து இந்தியன் பிரீமியர் லீக் அணிகளின் உரிமையாளர்களை அழைத்து கூட்டத்தை போட்டது. அதில், வீரர்களை தக்கவைத்து கொள்ளும் கொள்கை வேண்டாம் என்று மூன்று அணிகள் கூறியது, மீதம் உள்ள அணிகள் தக்கவைத்து கொள்ளும் கொள்கைக்கு சம்மந்தம் தெரிவித்தது.
இரண்டு வருடமாக இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2015-இல் விளையாடிய அணிகளை வைத்து தக்கவைத்து கொள்ள அனுமதி கேட்டது, ஆனால் அது எப்படி முடியும் என அதில் ஏதேனும் ஒரு அணியின் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய மூன்று அணிகள் தக்கவைத்து கொள்ளும் பாலிசி வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், இந்த மூன்று அணிகளுக்கு மற்ற அணிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. மூன்று முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் குறைந்த பட்சம் 5 – 6 வீரர்களையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களையும், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 3 வீரர்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 வீரர்களையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 1 வீரரை தக்கவைத்து கொள்ளலாம் என கூறினார்கள்.
அடுத்த இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை இங்கிலாந்தில் வைத்து கொள்ளலாம் என இரண்டு அணிகள் கேட்டது, ஆனால் மற்ற அணிகளின் உரிமையாளர்கள் அதை மறுத்து விட்டார்கள். இந்த கூட்டம் முடிந்ததும் ஐபில் தலைவர் ராஜிவ் ஷுக்லா பத்திரிகையாளரிடம் பேசினார்.
“வீரர்கள் எண்ணிக்கை, வீரர்களின் சம்பளம், விளையாடும் அணி, மொத்தம் விளையாடவுள்ள அணிகள் என பல பிரச்சனைகள் இருந்தது, ஏலத்தின் நாள், இடம் மற்றும் தொடக்க வீழா , இவற்றை தவிர மற்ற அனைத்து பிரச்சனைகள் பற்றி பேசினோம்,” என ராஜிவ் ஷுக்லா தெரிவித்தார்.
“இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது, ஏனென்றால் ஒரு முறை எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என முடிவு செய்த பிறகு தான், என்னால் சொல்ல முடியும். வீரர்கள் மற்றும் அணிகளின் உடன்பாடுகளை வைத்து தான் முடிவு எடுக்க முடியும்,” என தெரிவித்தார் ராஜிவ் ஷுக்லா.