இந்திய அணியில் தற்போது வெளியில் இருக்கும் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் பாராட்டி புகழ்ந்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு நல்ல துவக்கம் இல்லை எனினும் கேப்டன் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோகித் இருவரும் சதம் அடித்து இந்திய அணி 337 ரன் குவிக்க உதவினர்.
இந்த பார்ட்னர்சிப் அற்புதமாக இருந்தது. என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
‘விராட் கோலி அற்புதமாக தனது 32ஆவது சதத்தைப் பதிவு செய்துவிட்டார். பல காலம் கழித்து போட்டியை துவக்கத்தில் இருந்து பார்க்கிறேன். தற்போது பந்து வீச்சாளர்களுக்கான நேரம் இது.
என ட்வீட் செய்திருந்தார்.
மேலும், மற்றொரு ட்வீட்டில்,
அதே ட்வீட்டில் ரோகித் சர்மாவை வர்ணிக்க இயலவில்லை. அவருடைய இந்த ஆட்டத்திற்கு ஒரு தனி ட்வீட் தான் போட வேண்டும். க்லாஸ் ஆட்டத்திற்கு வாழ்த்துக்கள் சகோ.
என ட்வீட் செய்திருந்தார் ரவி அஷ்வின்.
’நியூசிலாந்து கிரிக்கெட் அணி, கடைசிவரை சவாலாகவே இருந்தது’ என்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறினார்.
நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. கான்பூரில் நடந்த இந்தப் போட்டியில் விராத் கோலி 113 ரன்களும் ரோகித் சர்மா 138 ரன்களும் குவித்தனர்.
வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, நியூசிலாந்து அணியை புகழ்ந்தார். அவர் கூறும்போது,
‘நியூசிலாந்து அணி, கடைசிவரை எங்களுக்கு சவாலாகவே இருந்தது. கடந்த மூன்று போட்டிகளிலுமே அந்த அணி சவாலைத் தந்தது. அதன் காரணமாக, நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம். அந்த அணி போராடிய விதம் பாராட்டக் கூடியது. சிறப்பாக விளையாடிய அந்த அணிக்கு என் வாழ்த்துகள்.
இந்தப் போட்டியில் முதலில் நாங்கள் சிறப்பாக அடித்து ஆடினோம். பேட்டிங்கிற்கு சாதகமாகவே விக்கெட்டும் இருந்தது. ஆனால், கடைசி 15 ஓவர்களில் ரன்களை வேகமாக குவிக்க முடியவில்லை. இதனால் 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இந்தப் போட்டி முக்கியம் என்பதால், எங்கள் வீரர்கள் கடுமையாக போராடினார்கள்.
முழுமையாக ஒட்டுமொத்த அணியும் இணைந்து போட்டியை, தொடரை வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். தனிப்பட்ட முறையில் நானும் நன்றாக ஆடியது போனசாக அமைந்துவிட்டது’ என்றார்.