Cricket, IPL, Rajasthan Royals, IPL 2018

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது. வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரின் 10-வது சீசன் சிறப்பாக முடிந்துள்ளது.

அடுத்த வருடம் 11-வது சீசன் நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் இறங்க இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா, ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். விராட் கோலி, ரோகித் சர்மா, கெய்ல், பொல்லார்டு போன்ற வீரர்கள் ஒரே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இதனால் மற்ற அணிகள் பெரிய வீரர்களை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது.

ஐ.பி.எல். வீரர்கள் புதிதாக ஏலம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெயரை மாற்ற விருப்பம் 1

ஆகவே, 11-வது சீசனுக்காக புதிதாக ஏலம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் களம் இறங்க இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது பெயரை மாற்ற விரும்புகிறது.

அதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது சொந்த மைதானமான மொகாலியை வேறு இடத்திற்கு மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ-க்கு வேண்டுகோளும் வைத்தது. ஆனால், பிசிசிஐ பஞ்சாப் அணியின் வேண்டுகோளை நிராகரித்தது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *