சச்சினுக்கு அவரது தீவிர ரசிகரான சுதிர் குமார் கவுதமுக்கும் ஒரு நல்ல நெருக்கும் இருக்கிறது,சுதிர் குமார் சச்சின் மீது வைத்து இருக்கும் அன்பு நாம் அனைவருக்கும் தெரியும்.
இந்தியா எங்கு விளையாடுகிறதோ அங்கலாம் சுதிர் குமார் கண்டிப்பாக இருப்பார் எந்த நாடானாலும் சேரி சுதிர் குமார் அங்கேயும் சென்று இந்திய கிரிக்கெட் அணிக்காக கண்டிப்பாக அவர் செல்வார்.
சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றும் இவர் இந்திய அணிக்காக தன் ஆதரவை தராமல் இருந்தது இல்லை இன்னும் அவர் இந்திய அணிக்காக தன் ஆதரவை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறார்.
தற்போது சாம்பியன் ட்ரோபிக்காக அவர் விசா வாங்க சென்ற பொது சிறிய பிரச்சனைகளால் விசா வாங்குவதில் தாமதம் ஆகி விட்டது.
இதை அறிந்த சச்சின் உடனே விசா வாங்கும் அலுவலகத்திற்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பினார் இதனால் சுதீப் குமாருக்கு இன்னும் 2 நாட்களில் விசா கிடைத்துவிடும்.
சச்சின் எழுதிய கடிதம் :
“இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ஆதரவாளராக திரு சுதிர் குமார் சௌத்ரி என்பவர் தனது உற்சாகத்தினால் அணியின் அதிகாரப்பூர்வமற்ற சின்னமாக மாறியுள்ளார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்”
“அவரது உறுதிப்பாடு இடைவிடாமல் உள்ளது மற்றும் அணி சுற்றுப்பயணமாக இருக்கும் போதெல்லாம், தனது சொந்த செலவில் அவர் அதிக தூரம் செல்கிறார்.வீரர்கள் எந்த உதவியும் பெறாமல் இந்திய கிரிக்கெட்டை ஆதரிக்கும் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து யாராவது அவரது பாசத்தை பின்பற்றுவதற்கு ஏராளமான கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர், சச்சின் டெண்டுல்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“என் சார்பாக நான் நம்புகிறேன், உங்களுடைய ஒத்துழைப்பை சுதாகர் குமார் அவருக்கு வழங்க வேண்டும்,” என்று சச்சின் முடித்தார்.