India, Sri Lanka, Cricket, KL Rahul, Abhinav Mukund

இந்திய அணியின் தொடக்கவீரர் லோகேஷ் ராகுல் காயத்தில் இருந்து முழுவதும் விடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், கொலோம்போவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.

பல நாட்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய லோகேஷ் ராகுல், உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் அவர் கொலோம்போவில் தங்கிவிட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது விளையாடுவாரா விளையாடமாட்டாரா என கேள்விகள் எழுந்த போது, அவர் விளையாடுவார் என பச்சை கோடி ஆட்டினார்கள்.

அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினாள், அபினவ் முகுந்த் வெளியே உட்காரவேண்டும். அவருக்கு கொடுத்த வாய்ப்பை அவர் ஒழுங்காக பயன்படுத்தவில்லை. முதல் டெஸ்டில் 12 ரன் முகுந்த் அடிக்க, ஷிகர் தவான் 190 ரன் அடித்தார்.இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தன் இடத்தை உறுதி படுத்தினார் தவான்.

இந்த டெஸ்ட் போட்டியில் பயங்கரமாக விளையாடி வரும் இந்திய அணி, வலுவான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணியை 291 ரன்னுக்கு சுருட்டிவிட்டு, 498 ரன் முன்னிலையில் உள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *