Virat Kohli, Ms Dhoni, India, Cricket, South Africa, Champions Trophy, Imran Tahir

தற்போது இந்திய அணி இலங்கையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளிலும் வென்று இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றது. கொலோம்போவில் நடக்கும் 5வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய டிக்வெல்லா மற்றும் தரங்கா இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ஆனால், டிக்வெல்லாவை தொடக்கத்திலே வெளியேற்றினார் புவனேஸ்வர் குமார். அடுத்து வந்த முனவீரா மீண்டும் புவனேஸ்வர் ஓவரில் சிக்கினார். புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை லாங் ஆப் திசையில் அடிக்க முயற்சி செய்தார் முனவீரா, ஆனால் சரியாக படாத அந்த பந்து பவுண்டரி கோட்டுக்கு செல்ல வில்லை. இதனால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அந்த பந்தை பிடித்துவிட்டு கீழே விழுந்துவிட்டார்.

அதிரடியாக விளையாடி கொண்டிருந்த உபுல் தரங்கா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த திரிமன்னே மற்றும் மத்தியூஸ் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

முனவீராவை பெவிலியனுக்கு அனுப்ப பின்னாடி ஓடி கொண்டே விராட் கோலி பிடித்த கேட்சை பாருங்கள்:

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *