ரோஹித் சர்மா
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse
எல்லாம் போதும்… ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அடுத்த கேப்டனாக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்

நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை விராட் கோலி தலைமையில் எதிர்கொண்ட இந்திய அணி, மிக மோசமான தோல்விகளை சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறியது. கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரோடு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார், இதனால் ரோஹித் சர்மாவிடம் இந்திய அணியின் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது.

இந்திய அணி

விராட் கோலியை விட கேப்டன்சியில் ரோஹித் சர்மாவே சிறந்தவர் என கருத்து இன்று வரை உள்ளது. ரோஹித் சர்மாவை புகழ்ந்து பேசும் பலரும் விராட் கோலி ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை, ஆனால் ரோஹித் சர்மா ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்றே பேசுவார்கள். ஐபிஎல் தொடரை போல் இந்திய அணியையும் ரோஹித் சர்மா சிறப்பாக வழிநடத்தி கோப்பைகளை குவித்து கொடுக்க போகிறார் என்றே அவரது ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ரோஹித் சர்மா தலைமையின் கீழ் தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்ற இந்திய அணி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் படுதோல்வியை சந்தித்து இறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஆசிய கோப்பையில் சொதப்பினால் என்ன டி.20 உலகக்கோப்பையை இந்திய அணியே வெல்லும் என எதிர்பார்கக்ப்பட்டது, இதற்கு ஏற்றார்போல் லீக் போட்டிகளில் மாஸ் காட்டிய இந்திய அணி, குரூப் 2 பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

ரோஹித் சர்மா

அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. உலகக்கோப்பையையே வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதல் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, டி.20 போட்டிகளில் ஒரு அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோவ்லியடைவது ஏற்புடையது அல்ல என்பதால், ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட வேண்டும் என்ற கருத்து தற்போதே எழ துவங்கிவிட்டது. அணியில் மாற்றங்கள் செய்தால் மட்டுமே அடுத்த உலகக்கோப்பை தொடரிலாவது சிறப்பாக செயல்பட முடியும் என முன்னாள் வீரர்கள் பலர் ஆலோசனை கொடுத்து வருகின்றனர்.

ரோஹித் சர்மா

இந்தநிலையில், ஒருவேளை ரோஹித் சர்மா தானாக கேப்டன் பதவியில் இருந்து விலகினாலோ, அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ, இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

கே.எல் ராகுல்;

இவரது பெயரை படிப்பதாலேயே பலருக்கு கோவம் ஏற்படலாம், நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு இவரும் முக்கிய காரணம் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் இந்திய அணியோ கடந்த இரண்டு வருடங்களாகவே இவருக்கு அதிகபட்ச ஆதரவை கொடுத்தே வருகிறது. தற்போதைய துணை கேப்டனான கேஎல் ராகுல் அடுத்த கேப்டனாக வருவதற்கும் வாய்ப்புகள் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *