ஹர்திக் பாண்டியா;
கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து பேட்டிங், பந்துவீச்சில் மட்டுமல்லாமல் கேப்டன்சியிலும் ஜொலித்து வரும் ஹர்திக் பாண்டியா தற்போதைய இந்திய அணியின் மிகப்பெரும் பலமாக திகழ்ந்து வருகிறார். கே.எல் ராகுலை விட ஹர்திக் பாண்டியாவிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. ஒருவேளை கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் அடுத்த துணை கேப்டனாக நியமிக்கப்படுவார்.