சிவம் துபேவிற்கு மீண்டும் அணியில் இடம்; இறுதி போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா !! 1
சிவம் துபேவிற்கு மீண்டும் அணியில் இடம்; இறுதி போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய தென் ஆப்ரிக்கா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.

சிவம் துபேவிற்கு மீண்டும் அணியில் இடம்; இறுதி போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா !! 2

வெஸ்ட் இண்டீஸின் பார்படோஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இறுதி போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே தென் ஆப்ரிக்கா அணியுடனான இறுதி போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

அதே போன்று தென் ஆப்ரிக்கா அணியும் தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இறுதி போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

குவிண்டன் டி காக், ரீசா ஹென்ரிக்ஸ், மார்கம்,  ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்கியா, தப்ரைஸ் சம்சி.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *