மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல் படுகிறார் சஹா. ஆனால், இப்போது 2019 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட ஆசை படுகிறார்.
சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் தோனி, தன்னை பற்றி கேள்வி கேட்பவரின் வாயை பூட்டினார் தோனி. ஆனால், இது போன்று பெரிய தொடரில் சஹா விளையாட நினைப்பது தவறல்ல.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பெங்கால் கிரிக்கெட் வீரர் வ்ரிதிமான் சஹா, 2019 உலகக்கோப்பையில் ‘நான் விளையாட வேண்டும்’ என என் மனைவி ஆசைப்படுவதாக கூறினார் சஹா.
“2019 உலகக்கோப்பையில் நான் விளையாடவேண்டும் என என் மனைவி ஆசைபடுகிறார். அதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஆனால், அனைத்தும் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது,” என சஹா கூறினார்.
“என் தயாரிப்பு எப்போதும் என் செயல்திறனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டது. அனைத்தும் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது. நான் ஒருநாள் போட்டிகளில் விளையாட மட்டும் சிறப்பாக செயல்படுவதில்லை,” என அவர் மேலும் கூறினார்.
2013இல் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால், இந்த முறை பலம் வாய்ந்த இந்திய அணியை தோற்கடிப்பது அந்த அணிக்கு சவாலாகவே இருக்கும்,” என சஹா தெரிவித்தார்.
“அக்சர் பட்டேல், யுஸ்வேந்த்ர சஹால், குல்தீப் ஆகியோர் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு பதிலாக தான் உள்ளார்கள். அஸ்வின் மற்றும் ஜடேஜா உள்ளே வரும் போது, அவர்கள் வெளியே போகவும் தயாராக இருக்க வேண்டும்,” என கூறினார் சஹா.