டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவான சிக்சர் விளாசும் போட்டியில் டோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று நடக்கிறது. இந்த தொடரின் தொடக்க விழாவாக சிக்சர் விளாசும் போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி, மோகித் ஷர்மா, பத்ரிநாத், பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழ்நாடு பேட்ஸ்மேன் அனிருத் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டர்.
மெஷின் மூலம் வீசப்படும் பந்தை சிக்சருக்கு விளாசுவதுதான் இந்த சிக்ஸ் விளாசும் போட்டி. முதல் நபராக ஹெய்டன் சிக்ஸ் அடிக்க களம் இறங்கினார். அவர் முதல் பந்தை தவிர மற்ற இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார்.
அடுத்து வந்த நெஹி சிக்ஸ் அடிக்கவில்லை. அனிருத் ஸ்ரீகாந்திற்கு சரியாக பந்துகள் அமையவில்லை. அதன்பிறகு மெஷினில் டோனி பந்தை வைத்தார். இதில் மூன்று சிக்ஸ் விளாசினார்.
இறுதியாக டோனி களம் இறங்கினார். டோனி தான் சந்தித்த மூன்று பந்துகளையும் அதிக தூரத்திற்கு சிக்சர்களாக விளாசி அசத்தினார்.
போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் கூடியிருந்த சி.எஸ்.கே. ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஜெர்ஸி வழங்கினார்.
தோனி அடித்த மூன்று சிக்ஸர்களை இங்கே பாருங்கள்:
#Chepauk #MSDhoni #six #cskreturns #DHONIism #dhonireturns DhOnI ReTuRnS❣️???? after long time yellow jersey ???? pic.twitter.com/RHbc3G0cwW
— sprj_7 (@sprj_7) July 22, 2017