தற்போது இந்திய அணி இலங்கையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி, கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கேதார் ஜாதவ், அக்சர் பட்டேல் மற்றும் யுஸ்வேந்த்ர சஹாலின் சுழலை இலங்கை வீரர்களால் தாக்குப்புடிக்க முடியவில்லை.
8 விக்கெட்டுகள் சரிந்த போது, உள்ளே வந்த மலிங்கா சிக்ஸர் அடிக்க தொடங்கினார். ஆனால், தோனியின் மூளை சும்மா இல்லாமல், மாஸ்டர் பிளான் போட்டது.
அடித்து விளையாடவேண்டும் என்று மலிங்கா நினைத்த போது, சஹாலிடம் வைட் பந்தை வீச சொன்னார். அந்த பந்தை சிக்சருக்கு விலாச ஏறி விளையாடிய மலிங்கா, அந்த பந்தை தொட முடியவில்லை. இதனால், அந்த பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார் மகேந்திர சிங் தோனி.
அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
https://twitter.com/84107010ghwj/status/899242301989453824