எப்பவுமே கோபத்துடன் இருக்கும் விராட் கோலி, இடுப்பு வலியால் துடித்த க்ருனால் பாண்டியாவை பார்த்து சிரித்தார்.
162 சேசிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்திருந்தது. பொல்லார்ட் அவுட் ஆகி வெளியேற, இடுப்பு வலியுடன் உள்ளே வந்தார் க்ருனால் பாண்டியா. 14வது ஓவரில் கோலியிடம் பந்து போனது, அதில் சுலபமாக 2 ரன் ஓடலாம், ஆனால் க்ருனால் பாண்டியாவுக்கு இல்லை. அவருக்கு இருக்கும் இடுப்பு வலியால், அவரால் நடக்க கூட முடியவில்லை.
அதை அறிந்த கோலி, பந்தை ஸ்டம்புக்கு த்ரோ அடித்தார். அந்த பந்து ஸ்டம்ப் மேல் படவில்லை. அந்த கோட்டை தொடுவதற்கு விழுந்தார் பாண்டியா, அவரது தொடைக்கு கீழ் கோலி அடித்த பந்து சிக்கியதால், வலியால் துடித்தார் பாண்டியா. இது போல் நேரத்தில் சிரிக்காமல் இருக்கும் கோலி சிரித்து விட்டார். அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
https://twitter.com/lKR1088/status/859050853239472128