Cricket, India, Sri Lanka, Shikhar Dhawan, Angelo Mathews

4 போட்டிகளில் மூன்று சதம் அடித்த ஷிகர் தவான், இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாய் உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் அடித்த ஷிகர் தவான், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டு சதம் அடித்தார். அதே போல் முதல் ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதல் போட்டியில் விட்டதில் இருந்து தொடங்கினார் தவான். தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய தவான் 49 ரன்னில் இருக்கும் போது, பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 49 ரன்னில் இருக்கும் போது ஏஞ்சலோ மத்தியூஸ் கேட்ச் பிடிக்க, தவான் பெவிலியன் சென்றார்.

237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தார்கள். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் தவானும் அவுட் ஆனார். ஸ்ரீவார்த்தேனா வீசிய பந்தை, ஸ்வீப் ஷாட் அடித்த தவான், ஏஞ்சலோ மத்தியூஸிடம் சிக்கினார்.

அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:

https://twitter.com/84107010ghwj/status/900753004214837248

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *