Cricket, Virat Kohli, India, Anil Kumble

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ய, இந்திய கேப்டன் மற்றும் அனில் கும்ப்ளேவுக்கும் ஏற்பட்ட மோதல் தான் காரணமா? இல்லை.

அவர் ராஜினாமா செய்வதற்கு முன்பு, இந்திய அணி பயிற்சியாளராக இவரே இருக்க வேண்டும், ஆனால் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது இரண்டு மாதம் ஒப்பந்தம் வேண்டாம், என்றால் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியதுடன் கேட்டிருந்தார். “ஐபில் போது இந்திய வீரர்களுக்கு ஒப்பந்தம் இல்லை, ஏனென்றால் அவர்கள் ஐபில் விளையாடுகிறார்கள். அதே போல், பயிற்சியாளருக்கும் செய்ய வேண்டும். இதனால், டி20 போட்டிகளில் அனுபவம் பெறலாம்,” என கும்ப்ளே இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதியிருந்தார்.

கிரிக்கெட் விதிமுறை புத்தகத்தில் 10 மாதம் இந்திய அணியின் ஒப்பந்தமும், ஐபில்-இல் 2 மாத ஒப்பந்தமும் இருக்க கூடாது என்பது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், வினோத் ராய்க்கு ராமச்சந்திர குஹா கடிதம் எழுதியுள்ளார். 10 மாதம் இந்திய அணியின் ஒப்பந்தமும், ஐபில்-இல் 2 மாத ஒப்பந்தமும் இருக்க கூடாது என்று எழுதினார். ஆனால், இந்திய அணியுடன் மற்றும் ஐபில்-இல் ஒப்பந்தம் வைத்திருக்கும் ராகுல் ட்ராவிடின் பெயரை அவர் குறிப்பிடவே இல்லை.

இதனால், சந்தேகத்தில் இருந்த ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டார். இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபில், என இரண்டிலும் ஒப்பந்தம் வைத்திருக்க கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி படுத்தியது. இதனால், அனில் கும்ப்ளேவும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா பெற இதுவும் ஒரு காரணமாகும்.

 

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *