சாம்பியன்ஸ் ட்ராபி 2017: யுவராஜை மாற்ற வரும் மூன்று வீரர்கள்

தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதல் 8 அணிகள் விளையாடுகிறது.

ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியை விளையாடுகிறது இந்திய அணி. இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி இடது கை வீரர் யுவராஜ் சிங் விளையாடுவது சந்தேகம் தான். இந்தியா மேற்கொள்ளும் பயிற்சியில் யுவராஜ் சிங் பங்கேற்க வில்லை. இதனால், இந்த தொடரில் அவர் விலகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதனால், தொடக்கத்திலேயே ஒரு ஐந்து வீரர்களை கைக்குள் வைத்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். அப்படி யுவராஜ் சிங் இந்த தொடரில் இருந்து விலகினால், மாற்று வீரர்களாய் 3 வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று இப்பொழுது பார்ப்போம்.

ரிஷப் பண்ட்

யுவராஜ் சிங்குக்கு பதிலாக டெல்லி விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் சிறந்த மாற்று வீரராக இருப்பார். முன்னால் U19 துணை கேப்டன் ரிஷப் பண்ட் விளையாடிய 8 உள்ளூர் போட்டிகளில் 972 ரன் அடித்து அசத்தியுள்ளார். அதில் ஒரு முச்சதம் மற்றும் 48-பந்து சதம் அடங்கும். இதனை கண்டு வியந்த இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அவரை அழைத்தது.

அதை தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய அவர் பட்டையை கிளப்பினார். இதனால், சாம்பியன்ஸ் டிராபிக்காக பேக்-அப் அணியில் இருக்கும் 5 வீரர்களில் இவரும் இடம் பிடித்தார். அப்படி யுவராஜ் சிங் இந்த தொடரில் இருந்து விலகினால், ரிஷப் பண்டை இந்திய அணி அழைக்க வாய்ப்பு உள்ளது.

சுரேஷ் ரெய்னா

இந்த பட்டியலில் அடுத்து இருப்பது சுரேஷ் ரெய்னா. இந்திய அணியில் இவர் ஒரு முக்கிய வீரராக இருந்தார். இவர் கடைசியாக இந்தியாவிற்காக 2015-இல் விளையாடினார். இந்த ஆண்டு நியூஸிலாந்து தொடருக்கு அவருடைய பெயர் இருந்தது. ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதற்கு பிறகு, ரஞ்சி, உள்ளூர் போட்டிகளில் ஆடாததை கண்ட பிசிசிஐ, மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ரெய்னாவின் பெரியாரை நீக்கியது. ஆனால், ‘பேக்-அப்’ பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயரை குறிப்பிட்டுள்ளது. இதனால், யுவராஜுக்கு மாற்று வீரராக இவரை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

க்ருனால் பாண்டியா

ஒரு ஆல்-ரவுண்டருக்கு பதிலாக இன்னொரு ஆல்-ரவுண்டர் வருவது தான் சரி. இதனால், மும்பை ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அவருடைய திறமையை இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நிரூபித்து உள்ளார்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அவர் கலக்குவார். இதனால், யுவராஜுக்கு பதிலாக இவர் சென்று இவருடைய சகோதரர் ஹர்டிக் பாண்டியாவுடன் விளையாட வாய்ப்பு உள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.