Cricket, India, Ms Dhoni, Avesh Khan, RCB, Virat Kohli

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்க ஆசைப்படுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், 20. இவர் கடந்த ஆண்டு நடந்த 19 வயது உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார். தவிர, உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.

தவிர, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் வளர்ந்து வரும் பல இளம் வீரர்களைப்போலவே, இவரும் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலேயா விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Ms Dhoni, Cricket, Champions Trophy, India, Pakistan, Shoiab Akthar

இதுகுறித்து அவேஷ் கான் கூறுகையில்,’ இந்திய அணியில் தோனி தலைமையிலான அணியில் விளையாட விரும்புகிறேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது. அவரது ஐபிஎல் அணியில் விளையாடிய பலர் அவரது தலைமையைப்பற்றி கூறியுள்ளனர். மிகச்சிறந்த தலைவர் அவர். தோனி மீண்டும் கேப்டனாகும் அணிக்காக ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதே என் வாழ்நாள் கனவு.’ என்றார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *