Cricket, India, Sri Lanka, IND vs SL, Shikhar Dhawan, Cheteshwar Pujara
(Photo Source: AFP)

தற்போது இந்திய அணி இலங்கைக்கு சென்று டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் 2வது நாள் முடிவடைந்த நிலையில், இலங்கை அணி மோசமான நிலையில் உள்ளது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 399 ரன் எடுத்திருந்தது. இரண்டாவது நாளில் 600 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 154 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் நடந்ததை பாப்போம்:

1. முதல் இன்னிங்சில் தவான் மற்றும் புஜாரா 150 ரன்னுக்கு மேல் அடித்தார்கள். இந்தியாவுக்கு வெளியே ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் 150 அடிப்பது இது நான்காவது முறை.

2. தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்டிக் பாண்டியா 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 50 ரன் கடந்தார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிக சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் இவர்தான்.

3. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 600 ரன் அடித்தது. இலங்கையில் இந்திய அணி அடித்த 2வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 2010இல் இந்திய அணி 707 ரன் அடித்தது, இதுதான் இலங்கையில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

4. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் 31-2-132-6 என்ற கணக்கில் பந்துவீச்சை முடித்தார். இதுதான், இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வைத்திருக்கும் சிறப்பான பந்துவீச்சு.

5. இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் 4 பந்துவீச்சாளர்கள் 100 ரன்னுக்கு மேல் கொடுத்தார்கள். சொந்த மண்ணில் 4 பந்துவீச்சாளர்கள் 100 ரன்னுக்கு மேல் கொடுப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை, 2010-இல் இந்திய அணிக்கு எதிராக நான்கு பந்துவீச்சாளர்கள் 100 ரன்னுக்கு மேல் கொடுத்தார்கள்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *