இந்தியா-இலங்கை டெஸ்ட், இரண்டாவது நாள் ஆட்டம் வீண் 1

இந்தியா-இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டிடின் முதல் நாளைப் போலவே இரண்டாவது நாள் ஆட்டமும், சில ஒவர்களே வீசிய நிலையில் மழையால் கைவிடப்பட்டது.

நேற்றைய நாள் ஆட்டம் 11.5 ஓவர்களே வீசிய நிலையின் மழை தடை ஏற்ப்படுத்த 15 நிமிட்ம முன்னதாகவே இன்று துவங்கியது. இன்றைய நாளில் மொத்தம் 21 ஓவர்களே வீசப்பட்டது. நாளை மூன்றாவது நாள் ஆட்டமும் 15 நிமிடம் முன்னரே துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா-இலங்கை டெஸ்ட், இரண்டாவது நாள் ஆட்டம் வீண் 2

 

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இலங்கை அணி கேப்டன் சண்டிமல் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

மழைக்காரணமாக மதிய 1.30 மணிக்குத்தான் ஆட்டம் தொடங்கியது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மலின் அபார பந்து வீச்சால் லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோலி (0) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துவைக்கப்பட்டது, புஜாரா 8 ரன்னுடனும், ரகானே 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்கல் 6 ஓவரில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட் வீழ்த்தினார்.இந்தியா-இலங்கை டெஸ்ட், இரண்டாவது நாள் ஆட்டம் வீண் 3

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 15 நிமிடம் முன்னதாக 9.15-க்கே தொடங்கியது. இன்று 98 ஓவர்கள் வீசி முடிவு செய்யப்பட்டது.

புஜாரா, ரகானே ஆட்டத்தை தொடர்ந்தனர். ரகானே 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் புஜாரா நம்பிக்கையுடன் விளையாடினார்.

6-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விக்கெட் கீப்பர் சகா ஜோடி சேர்ந்தார். இந்தியா 32.5 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது. அதன்பின்பும் மழை தொடர்ந்து பெய்தது.இந்தியா-இலங்கை டெஸ்ட், இரண்டாவது நாள் ஆட்டம் வீண் 4

பின்னர் மழை விட்டாலும் பவுண்டரி லைன் அருகே ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் 2-வது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. 2-வது நாள் இந்தியா 21 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்தது. புஜாரா 47 ரன்களுடனும், சகா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். லக்மல் 11 ஓவர்கள் வீசி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *