மீண்டும் விலகிய கே.எல் ராகுல்... யாருமே எதிர்பார்க்காத வீரருக்கு வாய்ப்பு கொடுத்தது இந்திய அணி !! 1
மீண்டும் விலகிய கே.எல் ராகுல்… யாருமே எதிர்பார்க்காத வீரருக்கு வாய்ப்பு கொடுத்தது இந்திய அணி

இந்திய அணியின் சீனியர் வீரரான கே..எல் ராகுல், இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 15ம் தேதி துவங்க உள்ளது.

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாடாத கே.எல் ராகுல், மூன்றாவது போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல் ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர் மூன்றாவது போட்டியில் இருந்தும் விலகியுள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.எல் ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர் ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 90 சதவீதம் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள கே.எல் ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். எனவே கே.எல் ராகுலுக்கு பதிலாக தேவ்தட் படிக்கலுக்கு மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளூக்கான இந்திய அணி; 

ரோஹித் சர்மா, யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜத் படித்தர், வாசிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், சர்பராஸ் கான், தேவ்தட் படிக்கல், துருவ் ஜூரல், சர்பராஸ் கான், ஸ்ரீகர் பாரத், குல்தீப் யாதவ், பும்ராஹ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *