இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சார்களை பந்தாடினார் ஷிகர் தவான். இலங்கை பந்துவீச்சாளர்களை திணறடித்த ஷிகர் தவான் 190 ரன் அடித்து அவுட் ஆக, முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் அடித்திருந்தது இந்தியா.
இந்த போட்டியின் முதல் சீசனில் மட்டும் தான் இலங்கை வீரர்கள் சந்தோசமாக இருந்தார்கள். முதல் சீசனில் அபினவ் முகுந்த் அவுட் ஆகி வெளியேற, செதேஸ்வர் புஜாரா பேட்டிங் விளையாட வந்தார். இருவரும் கூட்டு சேர்ந்து இலங்கை பந்துவீச்சை திணறடிக்க, மதிய உணவிற்கு முன்பு அரைசதத்தை அடித்தார் ஷிகர் தவான்.
இருவரும் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் போது, தன் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் ஷிகர் தவான். இதனால், இலங்கை அணி வீரர்கள் தொங்கி போனார்கள்.
ஒரே சீசனில் 126 ரன் அடித்தார் ஷிகர் தவான், அது மட்டும் இல்லாமல் அதே சீசனில் தன் சதத்தையும் அடித்தார் தவான். புஜாராவுடன் சேர்ந்து 253 ரன் சேர்த்த ஷிகர் தவான், இரட்டை சதத்திற்கு 10 ரன் தேவை பட்ட நிலையில் அவுட் ஆகினார்.
இதனால், சாதனை புத்தகத்திலும் அவரின் பெயர் வந்தது. ஒரே சீசனில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் தவான். இந்த சாதனைக்கு முன்னாள் இந்திய வீரர் விரேந்தர் சேவாக் தான் சொந்தக்காரர். அவர் இதே இலங்கைக்கு எதிரான போட்டியின் போது ஒரே சீசனில் 133 ரன் அடித்தார். இந்த பட்டியலில் 5வது மற்றும் 7வது இடத்திலும் விரேந்தர் சேவாக் தான் இருக்கிறார்.