இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததால், கேப்டன் தான் பாஸ் என்றால், உங்களுக்கு பயிற்சியாளர் தேவை இல்லை என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எறபள்ளி பிரசன்னா விராட் கோலியை குற்றம் சாட்டினார்.
“கேப்டன் பாஸாக இருக்கும் போது அவர்களுக்கு எதற்கு பயிற்சியாளர்? அவர்களுக்கு சஞ்சய் பங்கர் மற்றும் ஆர். ஸ்ரீதர் கூட தேவை இல்லை என்று நினைக்கிறன்,” என்று பிரசன்னா கூறினார்.
“அனுபவம் வாய்ந்த வீரரான அனில் கும்ப்ளேவை மதிக்காத இவர்கள், சஞ்சய் பங்கர் மற்றும் ஆர். ஸ்ரீதர் பயம் இல்லாமல், அவர்களிடம் பேச தயங்குவார்கள் என நினைக்கிறன். அவர்கள் யாரும் கும்ப்ளேவை போல் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. உடற்பயிற்சிக்கு மட்டும் யாராவது ஒருவரை தேர்ந்தெடுங்கள், அவர்களுக்கு அது போதும். அது போல் அணுகுமுறை கொண்ட வீரருக்கு, பயிற்சியாளரே தேவை இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தேவையில்லாத வழியில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அவரது ஓராண்டு ஒப்பந்தத்தின் போது இந்திய அணி சிறப்பாக வெற்றி பெற்று தொடர் வெற்றிகளை பெற்று வந்தது. ஆனால், ஓராண்டு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம். சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால், இதெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது.