செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார் கோலி.
தற்போது இந்த உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். ஆனால், எப்போதும் அவருடைய பயிற்சியாளருக்கு மரியாதை கொடுப்பார். இன்று இதுபோல் இருக்க அவருடைய நல்ல மனது தான் காரணம். ஏழை குடும்பத்தில் இருந்த வந்த விராட் கோலி ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
“உலகில் இருக்கும் அனைத்து ஆசிரியர், குறிப்பாக கிரிக்கெட் உலகில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்,” என விராட் கோலி ட்வீட் செய்தார்.
To all the teachers around the world and especially to the ones in the Cricket World. ?? #HappyTeachersDay pic.twitter.com/pvtrBw5uyK
— Virat Kohli (@imVkohli) September 5, 2017
2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய விராட் கோலி, பல சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி, இப்போது இந்திய அணியின் முதுகெலும்பாய் இருக்கிறார்.
தற்போது விராட் கோலி இலங்கையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி, ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட டி20 தொடரையும் வெல்ல முனைப்புடன் உள்ளது.
இந்த தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி மோதவுள்ளது.