Cricket, India, Azharuddin, Yuvraj Singh

தற்போது இந்திய அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளது இதில் இந்த இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்க பட்டது இதில் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் இடம் பெறவில்லை இதனால் ரசிகர்கள் கோவமாக உள்ளார்கள்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து யுவராஜ் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்காக இப்போதும் இந்திய அணியின் கதவு திறந்தே இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் மூத்த வீரரான யுவராஜ் சிங் இடம்பெறவில்லை.

இதையடுத்து மூத்த வீரரான யுவராஜ் சிங்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக ஊடகங்களிலும் பல்வேறு கருத்துகள் வெளியாகின.

இந்த நிலையில் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருப்பதாவது: யுவராஜ் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் யாருக்கும் இந்திய அணியின் கதவு மூடப்படவில்லை. அனைவருக்கும் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடும் உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் அணி தேர்வு என்று வரும்போது சிறந்த அணியையே தேர்வு செய்ய முயற்சிக்கிறோம் என்றார்.

யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி பேசிய எம்.எஸ்.கே.பி 1

இந்திய அணியில் தோனியின் நிலை குறித்து எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: தேர்வுக்குழு கூட்டத்தின்போது தோனியைப் பற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு வீரரைப் பற்றியும் விவாதிக்கிறோம்.

தோனியின் எதிர்காலத்தைப் பற்றி கணிப்பது கடினம். இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். தோனி சிறப்பாக செயல்படுகிறபோது அவரை ஏன் நீக்க வேண்டும்? அவர் சிறப்பாக செயல்படாதபோது, அவருக்கு மாற்றாக யாரை களமிறக்குவது என்பது குறித்து நாங்கள் சிந்திப்போம்’ என்றார்

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *