Anil Kumble, Anil Kumble Coach, India, Cricket, Champions Trophy, West Indies tour

சாம்பியன்ஸ் டிராபி 2017-க்கு இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது., இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவுக்கும் மோதல் என தகவல்கள் வந்தது.

இந்த மாதம், இந்திய அணியின் புது பயிற்சியாளர்க்கு விண்ணப்பதாரர்களை அழைத்தது. கும்ப்ளேவின் ஓராண்டு ஒப்பந்தம் முடிந்தது. இதனால், அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கு முன்னால், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவுக்கும் மோதல் என தகவல்கள் வந்தது.

விராட் கோலி - அணில் கும்ப்ளே மோதலுக்கு குல்தீப் யாதவ் தான் காரணமா? 1

கடந்த ஆண்டு பயிற்சியாளராக பதவி ஏற்கப்படும் போது, சாம்பியன்ஸ் டிராபி 2017 வரைக்கும் தான் அவருடைய பதவி நீடிக்கம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய பதவியை வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் தொடங்கினார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்தியா, 2-0 என்னும் கணக்கில் தொடரை வென்று அசத்தியது இந்தியா.

அவர் பதிவியில் இருக்கும் போது, 17 டெஸ்ட் போட்டிகளில் 12 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது இந்தியா.

விராட் கோலி - அணில் கும்ப்ளே மோதலுக்கு குல்தீப் யாதவ் தான் காரணமா? 2

இவர்களின் மோதல் காரணத்தினால் முன்னாள் இந்திய அதிரடி வீரர் விரேந்தர் சேவாக்கை விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டது. ஆனால், விரேந்தர் சேவாக் மறுத்துவிட்டார்.

ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க கோலியிடம் கூறியிருக்கார். ஆனால், கோலி முடியாது என மறுத்து விட்டார். ஆனால், அடுத்த போட்டியில் அவர் காயம் காரணமாக விலகியதால், 4வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்தார். இதனால், கும்ப்ளே மீது கோலிக்கு கோபம் அதிகரித்தது.

இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்று கிரிக்கெட் நிர்வாக குழு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *